Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 லட்சம் போடுறோம்னு புரடா விட்டோம்: மத்திய அமைச்சரின் எகத்தாளப் பேச்சு

Webdunia
புதன், 10 அக்டோபர் 2018 (09:32 IST)
ஆட்சிக்கு வர மாட்டோம் என நினைத்து பொய்யான வாக்குறுதிகள் அளித்தோம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளிப்படையாக கூறியுள்ளார்.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலிலின் போது, இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியுள்ள கருப்பு பணத்தை மீட்டு மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் எனக் கூறியிருந்தார்.
 
தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமரானார். ஆனால், அவர் கூறியபடி கருப்புப் பணத்தை மீட்கவும் இல்லை. மக்கள் கணக்கில் இதுவரை பணம் செலுத்தவும் இல்லை.
 
இந்த விவகாரம் குறித்து சமூக வலைத்தளங்கள் மட்டுமில்லாமல், பல தேசிய அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை. அதனால் இஷ்டத்திற்கும் வாக்குறுதிகளை அள்ளி வீசினோம். ஆனால் எதிர்பாராமல் ஆட்சிக்கு வந்துவிட்டோம்.
ஆகவே மக்களிடன் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனையும் நாங்கள் சமாளிக்க வேண்டும் என சிரித்தபடியே கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments