Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"லலித் மோடியை நாங்கள் யாரும் சந்தித்ததில்லை'' - ராகுல் மறுப்பு

, சனி, 4 ஜூலை 2015 (15:43 IST)
லலித் மோடியை எங்கள் குடும்பத்தை சார்ந்த யாரும் சந்தித்ததில்லை என காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 

 
ஐபிஎல் மோசடி புகாரில் புகாரில் சிக்கியுள்ள முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித்மோடி வெளிநாட்டில் தங்கியுள்ளார். அவர், தான் தப்பிக்க சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவும் உதவியதாக கூறியிருந்தார்.
 
பிறகு, ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா, கணவர் வதேரா ஆகியோர் என்னை சந்தித்து பேசினர்'' எனவும் கூறியிருந்தார். இதனை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த தகவல் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், இது குறித்து கருத்து காங்கிரஸ் சார்பில் கூறப்பட்டபோது, ’எந்த சூழ்நிலையில் லலித் மோடியை ராகுல், பிரியங்கா, வதேரா சந்தித்ததில்லை. அவரது விரும்தோம்பலையும் பெற்றதில்லை. லலித்மோடி சொன்னதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை. இதனை ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுக்கிறார்ர்’ என்று தெரிவித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil