Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு நிலச்சரிவு .. லேட்டஸ்ட் தகவல்கள்.. இதுவரை 76 பேர் உயிரிழப்பு

Mahendran
செவ்வாய், 30 ஜூலை 2024 (16:20 IST)
வயநாடு பகுதி அருகே உள்ள மேப்பாடி, முண்டக்கை மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நடந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை, தீயணைப்புப்படை ஆகியவை மீட்பு பணியில் களத்தில் உள்ளன
 
மண்ணில் புதைந்தவர்களை மீட்பது முதற்கட்ட பணியாக கொண்டு மீட்புப்பணி நடக்கிறது. இதற்காக மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டு உள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 கோடி நிவாரணப்பணிகளுக்காக அறிவித்துள்ளார். மீட்புக்குழு ஒன்றும் தமிழ்நாட்டில் இருந்து இன்று செல்கிறது
 
மேலும் சூரல்மலையை இணைக்கும் பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் சுமார் 400 குடும்பங்கள் தவிப்பு என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் கேரள நிலச்சரிவில் தமிழகத்தின் கூடலூரை சேர்ந்தவர் உயிரிழப்பு என தெரிய வந்துள்ளது. கூடலூர், புளியம்பாறையை சேர்ந்த காளிதாஸ் கட்டட வேலைக்கு சென்ற நிலையில் கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாகவும், அவரது உடல் மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெடிக்கல் காலேஜ் மெஸ் மீது விழுந்த விமானம்.. 40 மாணவர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்..!

விமான விபத்தில் சிக்கிய முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.. அதிர்ச்சி தகவல்..!

அகமதாபாத் விமான விபத்து: 10 நிமிடங்கள் தாமதத்தால் விமானத்தை மிஸ் செய்த பயணி.. உறவினர்கள் மகிழ்ச்சி..!

அகமதாபாத் விமான விபத்து: 50 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல்.. 7 குழந்தைகள் நிலை என்ன?

விபத்துக்குள்ளான விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் பயணம் செய்தாரா? பயணிகள் லிஸ்ட்டில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments