Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாடு நிலச்சரிவு.. 4 நாட்களுக்கு பின் 4 பேர் உயிருடன் மீட்பு..!

Mahendran
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (13:39 IST)
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 4 நாட்களுக்கு பின் 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவத்தின் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வரும் நிலையில் இன்று 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். வடவெட்டி குன்று அருகே 2 பெண்களும், 2 ஆண்களும் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினர் அழைத்து சென்றனர். தற்போது நால்வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
வடவெட்டி குன்று பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகள் அடித்து செல்லப்பட்டதாகவும், சகதிகள் முழுவதும் மூடி இருந்தாலும் சுவாசிக்கும் அளவிற்கு காற்று இருந்ததால் 4 பேர் உயிர் பிழைத்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
வடவெட்டி குன்று பகுதியில் தொடர்ந்து மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வரும் நிலையில் இன்னும் சிலர் மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments