Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் உள்ள தண்ணீரில் தீப்பிடித்த அதிசயம்.. குடிக்க தண்ணீர் இல்லாமல் வாடும் கிராம மக்கள்..!

Webdunia
வியாழன், 30 மார்ச் 2023 (16:27 IST)
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீடுகளில் மற்றும் கிணற்றில் இருந்த தண்ணீரில் திடீர் என தீப்பிடித்து எரிந்து வருவதை அடுத்து அந்த பகுதி மக்கள் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் வாட்டத்துடன் இருப்பதாக தகவல் வெளியாக உள்ளன 
 
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள அஞ்சாலுமுட்டி என்ற பகுதியில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள குடிநீர் கிணறுகளில் திடீரென தண்ணீர் தீப்பற்றி இருக்கிறது. பொதுவாக தீப்பற்றி எரிந்தால் அதை தண்ணீரை வைத்து தான் தீயை அணைக்க முடியும். ஆனால் தண்ணீரிலே தீப்பற்றி வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர் 
 
இது குறித்த தகவல் தெரிந்தவுடன் அரசு அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு சென்று குடிநீர் கிணறுகளில் பெட்ரோல் கசிந்து உள்ளதா என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பொதுமக்கள் தாங்கள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் சிரமப்படுவதாகவும் உடனடியாக இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்றும் அரசு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டது ஏன்? பிரேமலதா விளக்கம்..!

வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்வா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

காவல்துறையை நிர்வகிக்க தெரியாத பொம்மை முதல்வர்: சிவகங்கை கஸ்டடி மரணம் குறித்து ஈபிஎஸ்..!

திமுக ஆட்சியில் கஸ்டடி மரணங்களை பெரிய பட்டியலே போடலாம்! - தவெக கண்டன அறிக்கை!

தற்கொலை தாக்குதல் நடத்தியது இந்தியாவா? பழி போடத் துடித்த பாகிஸ்தான்! - அம்பலமான உண்மை!

அடுத்த கட்டுரையில்
Show comments