Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து மாதவிடாய் சோதனை நடத்திய ஆசிரியர்கள்: அதிரடி நடவடிக்கை!

மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து மாதவிடாய் சோதனை நடத்திய ஆசிரியர்கள்: அதிரடி நடவடிக்கை!

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (12:12 IST)
கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலம் முஸாபர் நகரில் உள்ள கஸ்தூரிபா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் 70 மாணவிகளின் உடைகளை களைய சொல்லி அவர்களை நிர்வாணப்படுத்தி அவர்களது பெண்ணுறுப்பை சோதனை செய்துள்ளார் அந்த விடுதியின் வார்டனும், தாளாளருமான பெண் சுரேகா தோமர்.


 
 
பள்ளி விடுதியின் கழிவறையில் மாதவிடாய் இரத்தம் இருந்ததற்காக அங்கு தங்கியிருந்த மாணவிகள் 70 பேரில் யாருக்கு மாதவிடாய் ஏற்பட்டது என்பதை சோதனை செய்ய அவர்களை நிர்வாணப்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் விடுதி காப்பாளர்.
 
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் மூலம் புகார் அளிக்கப்பட்டு அதில், மாணவிகள், தங்களது உடைகளை மனிதாபிமானமற்ற முறையில் விடுதியில் அகற்றினார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர். அந்த விடுதி காப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.
 
நாடு முழுவதும் பரபர்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் உண்மை என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments