Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்று மாநிலங்களில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

Webdunia
திங்கள், 12 மே 2014 (10:55 IST)
16 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒன்பதாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு  உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. 

மொத்தம் 41 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் பல நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும்.  இதுவரை 8 கட்ட தேர்தல்களாக 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் நேருக்கு நேர் மோதும் வாரணாசி தொகுதி உட்பட 3 மாநிலங்களில் பல தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது. 
 
உத்தர பிரதேசத்தில் 18 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
 
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது. 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments