Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு: ஒருவருடம் கால அவகாசம் நீட்டிப்பு..!

Webdunia
வியாழன், 6 ஏப்ரல் 2023 (16:53 IST)
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கு ஒரு வருடம் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் இது கட்டாயம் அல்ல என்றும் விரும்புபவர்கள் இணைத்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வழங்கப்பட்டிருக்கும் கால அவகாசம் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தகவல் தெரிவித்துள்ளார். 
 
மேலும் வாக்காளர் அடையாள அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படாது என்றும் அவர் உறுதி அளித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments