Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷன்-2050 தொலை நோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2015 (04:34 IST)
விவசாயிகளுக்கான "விஷன்-2050 என்ற தொலை நோக்குத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 25ஆம் தேதி வெளியிடுகிறார்.


 

இது குறித்து, பாட்னாவில், மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
பிகார் மாநிலம், பாட்னாவில் இந்தியவேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் நிறுவன நாள், ஜூலை  25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வேளாண் ஆராய்ச்சியில் பிகார்மாநிலம் முக்கிய இடத்தை பெற்றிருப்பதால், பாட்னாவில் "இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவன நாள்' கொண்டாடப்பட உள்ளது.
 
இந்த விழாவில், விவசாய துறையின் எதிர்கால சவால்களை எதிர் கொள்வதற்காக, வேளாண் விஞ்ஞானிகள் தயாரித்துள்ள "விஷன்-2050' தொலை நோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். இதுதவிர, விவசாயிகளுக்கான 3 புதிய திட்டங்களையும் அவர் தொடக்கிவைக்கிறார்.
 
இந்த விழாவில், விவசாயம்சார்ந்த கட்டுரைகளை எழுதிய பத்திரிகையாளர்கள், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் உள்ளிட்ட 82 பேருக்கு விருதுகளை வழங்கி நரேந்திர மோடி கௌரவிப்பார் என்றார். 
 

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

Show comments