Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விசாகப்பட்டிணம் விஷவாயு விபத்து; தென்கொரிய சிஇஓ உள்பட 11 பேர் கைது!

Webdunia
புதன், 8 ஜூலை 2020 (15:24 IST)
விசாகப்பட்டிணம் எல்ஜி பாலிமர்ஸ் ஆலையில் விஷவாயு கசிந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக தென்கொரிய சிஇஓ உட்பட 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 7ம் தேதி அதிகாலை வேளையில் விசாகப்பட்டிணம் பகுதியில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் ரசாயன ஆலையிலிருந்து விஷ வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் அருகாமையில் வசித்த பலர் மூச்சு திணறி உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பரபபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் ரசாயன ஆலை விபத்து தொடர்பாக நிர்வாக இயக்குனர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் தென் கொரியாவை சேர்ந்த எல்ஜி பாலிமர்ஸ் நிறுவன சிஇஓ-வும் ஒருவர். இவர்கள் மீது விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில் மக்கள் வாழும் பகுதியில் உள்ள எல்ஜி பாலிமர்ஸ் நிறுவனத்தை மக்கள் இல்லாத பகுதிக்கு கொண்டு செல்வது குறித்தும் முடிவுகள் எடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments