Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6ஆம் கட்ட தேர்தல்: விராத் கோஹ்லி, கவுதம் காம்பீர் வாக்களித்தனர்!

Webdunia
ஞாயிறு, 12 மே 2019 (08:13 IST)
இன்று 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் மேனகா காந்தி, அகிலேஷ் யாதவ், திக்விஜய்சிங், சாத்வி பிரக்யாசிங் ஆகியோர் தொகுதிகளும் அடங்கும்
 
இந்த நிலையில் இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் இன்று காலை சரியாக 7 மணிக்கே ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் என்ற பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது வாக்கை பதிவு செய்தார். அவர் வாக்குப்பதிவிற்காக வரிசையில் நின்றது., வாக்களித்தவுடன் மை கறை உள்ள விரலை காண்பித்தது குறித்து புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 
அதேபோல் கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லி பாஜக வேட்பாளருமான கவுதம் காம்பீரும் இன்று காலை 7 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். மேலும் போபால் தொகுதி பாஜக வேட்பாளரும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் அவர்களும் காலையில் ஓட்டளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments