Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் 3 நாட்கள் வி.ஐ.பி. தரிசனம் ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (17:05 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூன்று நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 24ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. ஆனால் அதற்கு அடுத்த நாள் 25 ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு காலை 8 மணி முதல் மாலை 7 மணிவரை நடை அடைக்கப்படும் உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது
 
எனவே தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த நாள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் நவம்பர் 8-ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்றைய தினம் காலை ஏழு முப்பது மணி முதல் 12 மணி வரை நடை சாத்தப்படும் என்றும் அன்றைய தினமும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. 67 ஆயிரத்திற்கு இன்னும் கொஞ்சம் தான்..!

2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments