பேருந்து நிலையத்தை திறந்து வைத்த எருமை! – கிராம மக்கள் நூதன நிகழ்ச்சி!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (12:55 IST)
கர்நாடகாவில் பேருந்து நிலையம் கட்டி தராத அரசை கண்டித்து எருமை மாட்டை கொண்டு பேருந்து நிலையம் திறந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தை சேர்ந்த கிராமம் ஒன்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து நிறுத்தம் இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் அக்கிராமத்திலிருந்து வெளியூர் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அப்பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க கோரி கடந்த பல ஆண்டுகளாக அம்மக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் நூதனமான போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.

அதன்படி தென்னை மட்டை, கீற்றுகளால் பேருந்து நிறுத்தம் போன்ற ஒன்றை கட்டி எருமை மாடு ஒன்றை கொண்டு அந்த பேருந்து நிறுத்தத்தை திறந்து வைத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

சென்னையின் முக்கிய திட்டத்திற்கு ரூ.200 கோடி கொடுத்த ஸ்ரீ சத்ய சாயி பாபா அறக்கட்டளை..!

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

அடுத்த கட்டுரையில்
Show comments