Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள விஜய் மல்லையா : நீதிமன்றத்தில் மனு

இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ள விஜய் மல்லையா : நீதிமன்றத்தில் மனு

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (18:15 IST)
இந்திய வங்கிகளிடம் வாங்கிய கடனை செலுத்தாமல், இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவிற்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார்.


 

 
பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கியுள்ள ‘மதுபான ஆலை முதலாளி’ விஜய் மல்லையா, கடனைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஒடி விட்டார். இதுதொடர்பாக வழக்குகள் நடைபெற்று வருகின்றன.  
 
இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று பல முறை சம்மன் அனுப்பியும் இதுவரை அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவரமுடியாத கைது உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில், திடீர் திருப்பமாக விஜய் மல்லையா இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரின் பாஸ்போர்ட் முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்று அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
எனவே, இதுவரை டிமிக்கி கொடுத்து வந்த விஜய் மல்லையா, விரைவில் இந்தியா திரும்பி வழக்குகளை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்: ஷங்கர்

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்க டெண்டர்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!

1 மில்லியனை கடந்த அண்ணாமலையின் ஹேஷ்டேக்! திமுக செல்வாக்கு குறைகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments