Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ஊடகங்களுக்கு வேற வேல வெட்டி இல்லை. விஜய்மல்லையாவின் திமிர்ப்பதிவு

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (03:43 IST)
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.9000 கோடி இந்திய வங்கிகளில் கடன் பெற்றுவிட்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்தார். அவரை நேற்று இண்டர்போல் போலீஸ் உதவியால் கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மூன்றே மணி நேரத்தில் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.


 


மூன்று மணி நேரத்தில் விஜய் மல்லையா ஜாமீன் பெற்றது எப்படி? என்று இந்திய ஊடகங்கள் ஆச்சரியத்துடன் விவாதம் செய்து கொண்டிருந்த நிலையில் இதுகுறித்து விஜய் மல்லையா தனது டுவிட்டரில் கேலியாக குறிப்பிட்டுள்ளார்.

'இந்திய ஊடகங்கள் வழக்கம்போல் இந்த விஷயத்தை பெரிதாக்கியுள்ளன. ஏற்கனவே எதிர்பார்த்தது போலத்தான் இன்று நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியுள்ளது' என்று அவர் விஜய் மல்லையா தனது டுவிட்டரில் திமிராக பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் தான் ஏற்கனவே கைது செய்யப்படுவோம் என்றும் அதே நேரத்தில் ஜாமீனும் கிடைக்கும் என்றும் அவருக்கு முன்பே தெரிந்துள்ளதாக கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments