Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால்....வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (13:48 IST)
காவிரியில் இருந்து தண்ணீர் கிடைக்க தமிழகமே ஒரு பக்கம் கர்நாடக மாநிலத்திற்கு எதிராக கொந்தளிப்புடன் போராடி வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் வாட்டாள் நாகராஜ் போராடி வருகிறார்.

இந்த நிலையில் இருமாநிலங்களுக்கும் இடையே பதட்டமான சூழல் காணப்படும் நிலையில் தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பா என்பவரை துணைவேந்தராக தமிழக ஆளுனர் நியமனம் செய்துள்ளார். இது எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல் இருப்பதாக தமிழக அரசியல் தலைவர்கள் தமிழக ஆளுனருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள சூரப்பாவுக்கு தமிழகத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இரு மாநிலங்களுக்கு இடையிலான பதட்டத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments