Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால்....வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (13:48 IST)
காவிரியில் இருந்து தண்ணீர் கிடைக்க தமிழகமே ஒரு பக்கம் கர்நாடக மாநிலத்திற்கு எதிராக கொந்தளிப்புடன் போராடி வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் வாட்டாள் நாகராஜ் போராடி வருகிறார்.

இந்த நிலையில் இருமாநிலங்களுக்கும் இடையே பதட்டமான சூழல் காணப்படும் நிலையில் தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பா என்பவரை துணைவேந்தராக தமிழக ஆளுனர் நியமனம் செய்துள்ளார். இது எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல் இருப்பதாக தமிழக அரசியல் தலைவர்கள் தமிழக ஆளுனருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள சூரப்பாவுக்கு தமிழகத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இரு மாநிலங்களுக்கு இடையிலான பதட்டத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments