Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரப்பாவுக்கு ஏதாவது நேர்ந்தால்....வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (13:48 IST)
காவிரியில் இருந்து தண்ணீர் கிடைக்க தமிழகமே ஒரு பக்கம் கர்நாடக மாநிலத்திற்கு எதிராக கொந்தளிப்புடன் போராடி வருகிறது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் வாட்டாள் நாகராஜ் போராடி வருகிறார்.

இந்த நிலையில் இருமாநிலங்களுக்கும் இடையே பதட்டமான சூழல் காணப்படும் நிலையில் தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பா என்பவரை துணைவேந்தராக தமிழக ஆளுனர் நியமனம் செய்துள்ளார். இது எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றுவது போல் இருப்பதாக தமிழக அரசியல் தலைவர்கள் தமிழக ஆளுனருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள சூரப்பாவுக்கு தமிழகத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது இரு மாநிலங்களுக்கு இடையிலான பதட்டத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments