Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெபாசிட் இழந்து மண்ணை கவ்விய வாட்டாள் நாகராஜ்...

Webdunia
செவ்வாய், 15 மே 2018 (17:04 IST)
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாட்டாள் நாகராஜ் அவர் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்துள்ளார்.

 
கடந்த 12ம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கியது. அதில், துவக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 112 இடங்கள் பாஜகவிற்கு கிடைக்கவில்லை. மேலும், திடீர் திருப்பமாக, மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. காங்கிரஸின் முடிவை தேவகவுடாவும் ஏற்றுக்கொண்டார். எனவே, மஜத கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இது ஒருபுறம் எனில், எப்போதும் தமிழகத்துக்கு எதிராக பேசும், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தும் வாட்டாள் நகராஜ் இந்த தேர்தலில்  மண்ணை கவ்வியுள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் சாம்ராஜ் நகர் தொகுதியில் அவர் போட்டியிட்டார். அந்த தொகுதியில் தமிழில் பேசி அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், வெறும் 5648 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.
 
காவிரி விவகாரத்தில் இவரின் அமைப்பை சேர்ந்தவர்களே தமிழர்களின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments