Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயமான இந்திய விமானம் கண்டுபிடிக்கப்பட்டது: பயணிகள் கதி?

Webdunia
செவ்வாய், 11 ஜூன் 2019 (15:49 IST)
இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் எட்டு நாள் தொடர்ந்த தேடுதலுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் கடந்த 3ஆம் தேதி அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமாய் மறைந்தது. விமானம் மாயமாகி ஒரு வாரம் ஆகியும் இந்த விமானம் குறித்து எந்தவித தகவலும் கிடைக்காததால் இந்திய விமானப்படை அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாயமான விமானத்தை கண்டுபிடிக்க இரவு பகல் பாராமல் தேடுதல் வேட்டையில் இறங்கியது இந்திய ராணுவம். உள்ளூர் பழங்குடியினர், சுற்றுலா வழிகாட்டிகள், பொது மக்களும் விமானத்தை தேடுவதற்கு உதவினார்கள். எட்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் இன்று விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சியாங் மாவட்டம் கட்டி என்ற ஊரின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சிதந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த 13 பேர் என்னவானார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரியவில்லை. இப்படியான ஒரு கோர விபத்தில் அவர்கள் அனைவரும் இறந்திருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments