Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாஜ்பாய்க்கு 'பாரத ரத்னா' விருது: வீட்டுக்கு சென்று வழங்குகிறார் குடியரசுத் தலைவர்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2015 (10:39 IST)
முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு 'பாரத ரத்னா'  விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று வழங்குகிறார்.
 
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா" வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
 
வாஜ்பாய்க்கான இந்த பாரத ரத்னா விருது, நாளை வழங்கப்படுகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். 
 
இந்நிலையில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று  வழங்குகிறார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
 
மதன் மோகன் மாளவியாவுக்கான "பாரத ரத்னா" விருது, அவருடைய குடும்பத்தினரிடம் இம்மாதம் 30 ஆம் தேதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments