Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாஜ்பாய்க்கு 'பாரத ரத்னா' விருது: வீட்டுக்கு சென்று வழங்குகிறார் குடியரசுத் தலைவர்

வாஜ்பாய்க்கு 'பாரத ரத்னா' விருது: வீட்டுக்கு சென்று வழங்குகிறார் குடியரசுத் தலைவர்
, வியாழன், 26 மார்ச் 2015 (10:39 IST)
முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு 'பாரத ரத்னா'  விருது அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று வழங்குகிறார்.
 
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மறைந்த சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா ஆகியோருக்கு நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா" வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
 
வாஜ்பாய்க்கான இந்த பாரத ரத்னா விருது, நாளை வழங்கப்படுகிறது. அவர் உடல்நலக் குறைவு காரணமாக, வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். 
 
இந்நிலையில், குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று  வழங்குகிறார். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
 
மதன் மோகன் மாளவியாவுக்கான "பாரத ரத்னா" விருது, அவருடைய குடும்பத்தினரிடம் இம்மாதம் 30 ஆம் தேதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil