Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ கைது செய்யப்பட்டார்..!

Arun Prasath
வியாழன், 28 நவம்பர் 2019 (12:47 IST)
ராஜபக்‌ஷேவின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தப்பய ராஜபக்சே வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்றார்.

ஈழத்தில் நடைபெற்ற உள்நாட்டு போரில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது மஹிந்த ராஜபக்சேவின் ஆட்சியில் தான் என ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் கண்டனங்கள் தெரிவித்துவரும் நிலையில் கோத்தபய ராஜபக்சே டெல்லிக்கு வருகை புரிகிறார்.

கோத்தப்பய ராஜபக்சேவின் வருகையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார். இதனை தொடர்ந்து போராட்டம் நடத்தியதற்காக வைகோ போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கோத்தப்பய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு ”துக்க நாள்” என வைகோ கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments