Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்வு!

Webdunia
சனி, 17 ஜூலை 2021 (13:30 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

 
மூன்றாவது அலை வரும் என எச்சரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால் அதேசமயம் தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. 
 
இதனால் வரும் டிசம்பர் மாதம் வரை 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற மத்திய அரசு ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறவனங்களுடன் புதிய ஒப்பந்தங்களை மத்திய அரசு இறுதி செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இதையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆம், கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதல் விலை ரூ.205 ஆகவும், கோவாக்சின் கொள்முதல் விலை ரூ.215 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 2 தடுப்பூசிகளும் தலா ரூ.150-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments