Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வளர்ப்பு நாய் குரைத்ததால் தகராறு; பெண் பலி!

Webdunia
புதன், 11 ஜனவரி 2023 (15:24 IST)
உத்தரபிரதேசத்தில் வளர்ப்பு நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் கிஹர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் லால் முனியா என்ற பெண். இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள சிவசாகர் பிந்த் என்பவர் வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.

நேற்று இரவு லால் முனியா தனது வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தபோது சிவசாகர் பிந்த் வளர்த்த நாய் லால் முனியாவை குரைத்ததுடன், கடித்தும் உள்ளது. இதுதொடர்பாக லால் முனியா குடும்பத்தினர் சிவசாகர் பிந்த் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் ஒருவரையொருவர் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் லால் முனியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments