இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு! – சாமியார் நரசிங்கானந்த் கைது!

Webdunia
ஞாயிறு, 16 ஜனவரி 2022 (10:50 IST)
உத்தரகாண்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சாமியார் நரசிங்கானந்த் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த மாதம் தர்ம சன்சாத் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக உறுப்பினர்கள் உட்பட பல இந்து மத தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் பேசிய இந்து மத தலைவர்கள் சிலர் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும்படி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது வெறுப்புணர்வு பேச்சை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டித்துள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் ஜிதேந்திர தியாகி என்பரை ஏற்கனவே கைது செய்திருந்தனர். இந்நிலையில் அவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தர்ஆ செய்த சாமியார் யதி நரசிங்கானத்தையும் போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரகாண்ட் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கைது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி கட்டடத்தில் இருந்து குதித்து 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. தொடர் சோகம்.

மந்தனா திருமணம் ஒத்திவைப்பா? அல்லது நிறுத்தமா? காதலனின் வீடியோக்கள் நீக்கம்.. உறவு முறிந்ததா?

சிறையில் இருக்கும் இலங்கை பெண்ணிடம் இந்திய பான் அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை வந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்..!

விஜய்யை விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோ பதிவிட்டவர் மீது தாக்குதல்.. 4 பேர் கைது..!

கோவில் கருவறைக்குள் செல்ல மறுத்த கிறிஸ்துவ அதிகாரி பணிநீக்கம் செல்லும் - உச்ச நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments