விஷ்வ இந்து மகாசபை தலைவர் சுட்டுக்கொலை! – உத்தர பிரதேசத்தில் பதற்றம்!

Webdunia
ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (12:15 IST)
உத்தர பிரதேசத்தில் இந்து மகாசபை மாநில தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநில விஷ்வ இந்து மகாசபை தலைவராக பதவி வகித்து வருபவர் ரஞ்சித் பச்சன். முன்னதாக சமாஜ்வாதி கட்சியில் முக்கியமான பொறுப்பில் இருந்த ரஞ்சித் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார்.

தற்போது விஷ்வ இந்து மகாசபையின் மாநில தலைவராக பதவி வகித்து வரும் ரஞ்சித் இன்று காலை தனது சகோதரருடன் நடைபயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த முகமூடி அணிந்த கும்பல் துப்பாக்கியால் ரஞ்சித்தை சரமாரியாக சுட்டதில் ரஞ்சித் சம்பவ இடத்திலேயே பலியானார். சில காயங்களுடன் அவரது சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஞ்சித் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சித்தை சுட்டவர்களை பிடிக்க போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments