ஓடும் ரயிலிலிருந்து விழுந்த நபர்; காப்பாற்றிய போலீஸ்! – வைரலாகும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (15:48 IST)
உத்தர பிரதேசத்தில் ரயில் நிலையம் ஒன்றில் பயணி ஒருவர் ரயிலிலிருந்து தவறி விழுந்தபோது போலீஸார் காப்பாற்றிய வீடியோ வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் ரெயில் நிலையத்தில் இருந்து ரயில் ஒன்று புறப்பட்டது. அப்போது அதன் படிக்கட்டுகளில் சிலர் அமர்ந்து பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் தவறி பிளாட்பாரத்தில் விழுந்தார்.

அவர் ரெயிலுக்கும், பிளாட்பாரத்திற்கும் இடையே சிக்கிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டபோது துணிகரமாக செயல்பட்ட ரயில்வே காவலர் நேத்ரபால் சிங் என்பவர் பயணியை காப்பாற்றினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் இதை பகிர்ந்துள்ள உத்தர பிரதேச போலீஸ், ரயிலில் ஆபத்தான வகையில் பயணிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடிப்படை அறிவு வேணும்.. கூட இருக்கிறவங்களுக்கே ஒன்னும் செய்யல.. விஜயை விமர்சித்த ராஜகுமாரன்

தொடர் முயற்சியில் தவெக... புதுச்சேரியில் விஜயின் ரோட் ஷோ நடக்குமா?....

காலை உணவுக்காக டிகே சிவகுமார் வீட்டுக்கு சென்ற சித்தாராமையா.. இருவரும் சமரசமா?

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments