Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பாடு கொடுத்து கட்டாய மதமாற்றம்? உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!

Webdunia
சனி, 29 அக்டோபர் 2022 (18:25 IST)
உத்தர பிரதேசத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவு, பொருட்கள் கொடுத்துவிட்டு தற்போது மதம் மாற கட்டாயப்படுத்துவதாக சிலர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள மங்காதபுரம் காலணியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகள் முன்னதாக கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது இந்த பகுதி மக்களுக்கு தேவையான உணவு, பொருட்களை கிறிஸ்தவ அமைப்பை சேர்ந்த சிலர் கொடுத்துள்ளனர்.

ALSO READ: கோவையில் அறிவிக்கப்பட்ட பந்த் தற்காலிகமாக ஒத்திவைப்பு - பாஜக அறிவிப்பு

அதற்கு பதிலாக கிறிஸ்தவ ஆலயத்திற்கு அவர்கள் வரவேண்டும் என்றும், மதம் மாற வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சில நாட்கள் முன்னதாக அவர்கள் அந்த காலணிக்கு வந்து அங்குள்ள வீடுகளில் இருந்த இந்து கடவுளர் படங்களையும் எடுத்து வெளியே வீசி அவமதித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அந்த காலணி மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், அதன்பேரில் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் பெண்கள் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

ஜூன் 4ஆம் தேதிக்கு பின் ராகுல் காந்தி ஒரு யாத்திரைக்கு செல்வார்.. அமித்ஷா கிண்டல்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: பாஜகவின் 2 பிரபலங்கள் ஆஜராக சிபிசிஐடி சம்மன்..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. இன்று எத்தனை மாவட்டங்களில் கனமழை?

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments