Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களை இரவு பணியில் ஈடுபடுத்தக்கூடாது..! – யோகி ஆதித்யநாத் அதிரடி!

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (09:16 IST)
உத்தர பிரதேசத்தில் தனியார் நிறுவனங்கள் பெண்களை இரவு நேர பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் உத்தர பிரதேச அரசு தொடர்ந்து பெண்கள் பாதுகாப்பிற்காக பல்வேறு சட்டத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தொடர்ந்து உத்தரபிரதேசத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத் கடந்த ஆட்சியின்போதே ஆண்டி ரோமியோ ஸ்குவாட் போன்றவற்றை உருவாக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது தனியார் நிறுவனங்கள் பெண் பணியாளர்களை இரவு நேர பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறாக பெண் பணியாளர்களை இரவு நேர பணியில் ஈடுபடுத்தினால், குறிப்பிட்ட பெண்ணிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும் என்றும், இலவச உணவு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை பெண் பணியாளருக்கு உறுதிபடுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்