Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மசாலா வெச்சு சமையல் மட்டுமில்ல.. சாதனையும் செய்வோம்! – உத்தர பிரதேச மாணவி உலக சாதனை!

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2020 (12:09 IST)
இந்தியாவில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களை வைத்து கமகமவென மணக்கும் அழகான ஓவியத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார் உத்தர பிரதேச மாணவி.

உலகத்தில் உள்ள எந்த நாடுகளில் மசாலா என்று சொன்னாலும் நினைவுக்கு வருவது இந்தியாவாகதான் இருக்கும். சமையலுக்காக விதம் விதமாக பல மணங்களில் 300க்கும் அதிகமான மசாலா வகைகள் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறதாம். பல்வேறு விதமான வாசனைகளுக்காகவும், ருசிக்காகவும் பயன்படுத்தப்படும் மசாலாக்களை சமையலுக்கு பதிலாக ஓவியத்தில் பயன்படுத்தி சாதனை படைத்துள்ளார் கல்லூரி மாணவி ஒருவர்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நேஹா சிங் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மசாலாக்களை பயன்படுத்தி 675 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான ஓவியத்தை வரைந்துள்ளார். இந்த சாதனைக்காக அவருக்கு கின்னஸ் விருது கொடுக்கப்பட்டுள்ளது. மசாலாவை வைத்து சமையல் மட்டுமல்ல சாதனையும் செய்யமுடியும் என நிரூபித்த மாணவிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை அடுத்து டெல்லி செல்லும் நயினார் நாகேந்திரன்.. என்ன காரணம்?

பிறந்து 15 நாட்கள் ஆன குழந்தையை பிரிட்ஜில் வைத்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்..!

அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்தேன்: செங்கோட்டையன் அதிரடி பேட்டி..!

நேபாளத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றுகிறதா? நாட்டை விட்டு வெளியேற பிரதமர் திட்டம்?

விஜயகாந்த் சகோதரி உடல் நலக்குறைவால் காலமானார்.. தேமுதிக இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments