செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (07:11 IST)
ஒருவரின் உயிருக்கு குந்தகம் விலைவிக்காத வகையில், செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவது குற்றமல்ல என கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களால்  ஏராளமான விபத்துகள் நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக செல்போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் அதிகம். அவ்வாறு போக்குவரத்து விதி மீறுபவர்கள் சட்டம் 118 (இ) ன் பிரிவின்படி 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதத்திற்கு ஆளாக்கப்படுவார்கள்.
 
இந்நிலையில் கேரளாவில் காக்கநாட்டை சேர்ந்த சந்தோஷ் என்பவர் செல்போனில் பேசியவாறு கார் ஓட்டியதால் அவர் மீது  118 (இ)-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் பொதுமக்களின் உயிருக்கு  குந்தகம் விலைவிக்காத வகையில் செல்போனில் பேசியவாறு கார் ஓட்டுவது குற்றமல்ல என தீர்ப்பளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

தீபத்திருநாள் வாழ்த்து கூறிய போஸ்டை திடீரென நீக்கிய செங்கோட்டையன்.. மீண்டும் பதிவு செய்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments