Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கியில் மோசடியை தடுக்க குரல் தொழில் நுட்ப கருவி - சிபிஐ

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2015 (16:40 IST)
வங்கியில் மோசடியை தடுக்க குரல் தொழில் நுட்ப கருவியை பயன்படுத்த வேண்டும் என்று சிபிஐ அதிகாரி கேசவ் குமார் கூறியுள்ளார்.
 

 
மும்பையில் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்ட 2 நாள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் மும்பை சிபிஐ இணை இயக்குநர் கேசவ் குமார் கலந்து கொண்டு பேசுகையில், ”வங்கியில் மோசடி நடைபெறுவதை தடுக்க அதிகாரிகள், ஊழியர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
 
இதற்காக நவீன தொழில்நுட்பத்தை அதிகாரிகள் பயன்படுத்த முன்வர வேண்டும். வங்கியில் கடன் கேட்டு வருபவர்களின் நோக்கத்தை முன்கூட்டியே அறிந்தால் மோசடியை எளிதில் தடுக்க முடியும். இதற்காக நவீன குரல் தொழில்நுட்ப கருவியை பயன்படுத்த வேண்டும்.
 
இந்த கருவியின் மூலம் கடன் கேட்க வருபவர் குரலை வைத்து மனதில் மோசடி செய்ய நினைக்கிறாரா என்பதை கண்டுபிடிக்க முடியும். இதை முன்கூட்டியே அறிந்து கொள்வதால் மோசடி ஆட்களுக்கு கடன் கொடுக்காமல் தவிர்த்து விடலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

Show comments