Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்: தமிழில் தேர்வெழுதி தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவர்

Webdunia
வெள்ளி, 13 ஜூன் 2014 (12:13 IST)
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் அகில இந்திய அளவில் 45வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
யுபிஎஸ்சி (upsc) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இத்தேர்வில், அகில இந்திய அளவில், 1,122 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இவர்களில் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கவுரவ் அகர்வால் என்பவர் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். தமிழகத்தின் தேனியை சேர்ந்த ஜெயசீலன் என்பவர் அகில இந்திய அளவில் 45வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளார்.
 
மேலும், சென்னையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவியான பெனோ என்பவர் அகில இந்திய அளவில் 343 வது இடத்தை பிடித்து சாதனை படைந்துள்ளார். 
 
தமிழகத்தில் முதல் இடம் பிடித்த ஜெயசீலன் தமிழில் தேர்வுகளை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

Show comments