Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிசம்பர் 31க்குப் பிறகு Google Pay, PhonePe, Paytm மூலம் கட்டணம் செலுத்த முடியாதா?

Webdunia
ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (11:05 IST)
ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் பணத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன்படி டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு  மோசடியை தடுப்பதற்காக யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் சம்பந்தப்பட்ட நபருக்கு அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கையை அனுப்பப்படும் என்றும் அந்த பரிவர்த்தனையை சரி பார்க்கும்படி கேட்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட நபர் சரிபார்த்தால் மட்டுமே வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
யுபிஐ மூலம் பணம் அனுப்புவதில் ஏராளமான மோசடிகள் நடைபெற்று வருவதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து வாடிக்கையாளர்களை சரிப்பார்க்கும் இந்த வசதி ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நடைபெற உள்ளது. 
 
எனவே ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்கள் கணக்கில் கேஒய்சி செய்ய வேண்டும் என்றும் வங்கி கணக்கில் பணம் கழிப்பதற்கு முன்னர் மொபைல் எண் சரிபார்க்கப்பட்டு அந்த மொபைல் எண்ணுக்கு  எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என்றும் வாடிக்கையாளர் சரிபார்த்த பின்னரே பணம் வங்கி அக்கவுண்டில் இருந்து கழிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments