Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்; உபி அரசின் ரக்சா பந்தன் பரிசு

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (22:06 IST)
ரக்சா பந்தனை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் பெண்கள் இரண்டு நாள்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. 

 
சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக வடமாநிலங்களில் ரக்சா பந்தன் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்படும். வரும் 26ஆம தேதி நாடு முழுவதும் ரக்சா பந்தன் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. 
 
ரக்சா பந்தன் அன்று பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் இருக்கக்கூடிய ஆண்களின் கையில் ராக்கி கட்டுவது விழாவின் சிறப்பு. எனவே, அனைத்து சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கும் இது மிகவும் விசேஷமான நாளாக இருக்கும்.
 
ரக்சா பந்தனை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநில அரசு, பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. 
 
இதுதொடர்பாக, மாநில போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரக்சா பந்தனை முன்னிட்டு பெண்கள், ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஏசி மற்றும் ஏசி அல்லாத அனைத்து மாநில அரசுப் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments