Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் உபி முதல்வர்!

Webdunia
வெள்ளி, 11 ஜூன் 2021 (07:04 IST)
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களுக்கும் பாஜக தலைமைக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை செய்தார். இந்த நிலையில் இன்று அவர் பிரதமர் மோடியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடியுடன் அவர் கலந்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஜித்தா பிரசாத் பாஜகவில் இணைந்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது
 
மேலும் நேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி, பாஜக தலைவர் ஜேபி நட்டா அவர்களையும் சந்திக்கவுள்ளார். இந்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை எதிர்கொள்வதற்காக பாஜக தேசிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அடுத்த தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டார் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments