Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் 84 ஐ.ஏ.எஸ், 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உபி முதல்வர் அதிரடி

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2017 (06:06 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற நாளில் இருந்தே பல அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதை அடுத்து நேற்று மேலும் ஒரு அதிரடி உத்தரவாக 84 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட மொத்தம் 138 உயர் அதிகாரிகள் ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.



 


பொதுவாக ஒரு மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் சகஜமே. ஆனால் இப்படி ஒரே நாளில் 84 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 54 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 138 உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆதித்யநாத் பதவியேற்றவுடன் ஒருமுறை அதிகாரிகள் மாற்றம் நடந்த நிலையில் குறுகிய கால இடைவெளியில் மீண்டும் அதிகாரிகள் இடமாற்ற நடவடிக்கை அரசு நிர்வாகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியலில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments