Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஃபியா கைதி முதல் பிக்பாக்கெட் கைதி வரை ஒரே உணவு: உபி முதல்வர் உத்தரவு

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (05:59 IST)
உத்தரபிரதேச மாநிலத்தின் புதிய முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்தே அவ்வப்போது அதிரடி திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் தற்போது அவர் சிறைத்துறையிலும் தனது அதிரடியை காட்ட தொடங்கியுள்ளார்.



 


உ.பி.யில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பெரிய மாஃபிய டான்கள் முதல் சாதாரண பிக்பாக்கெட் குற்றவாளிகள் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவையே வழங்க வேண்டும் என்று நேற்று அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

உபி சிறையில் ஒருசில கைதிகளுக்கு மட்டும் சிறப்பு உணவும் சாதாரண கைதிகளுக்கு சுமாரான உணவும் வழங்கப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து முதல்வர் யோகி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவை கண்டிப்பாக சிறை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும், அவ்வப்போது சோதனை நடத்தப்படும்போது தவறு நடப்பது தெரியவந்தால் அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்க்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் ஒருசில குற்றவாளிகள் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லவும் அனுமதிக்க நிச்சயம் கூடாது என்று கடும் உத்தரவிட்டுள்ளார் யோகி.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments