Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் பிரியாணி விருந்தில் அடிதடி: முதல் பந்தியில் அமர தள்ளுமுள்ளு

Webdunia
ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (18:04 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் பிரியாணி விருந்து வைத்தபோது அதில் முதல் பந்தியில் அமர தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பயங்கர அடிதடி ஏற்பட்டது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
 
உபி மாநிலம் பிஜ்னோர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நசிமுதீன் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்ட தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூடிய நிலையில் இவர்களுக்காக ஒரு வீட்டில் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் பிரியாணி விருந்தில் முதல் பந்தியில் இடம்பிடிக்க காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முந்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதில்  கொடிக்கம்புகளை மாற்றிப் பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கியதில் 7 பேர் மண்டை உடைந்தது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர். கடைசியில் பிரியாணி விருந்து யாருக்கும் கிடைக்காமல் போனதுதான் சோகம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

IRCTC-யின் 'ஸ்ரீ ராமாயண யாத்திரை' டீலக்ஸ் ரயில் பயணம்.. தொடங்குவது எப்போது? கட்டணம் எவ்வளவு?

தேர்தலுக்கு பின்புதான் முதலமைச்சர் யார்? என்பதை முடிவு செய்வோம்: டிடிவி தினகரன்

டெல்லி வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து.. லிப்டில் சிக்கிய நபர் பரிதாப பலி..!

மகாராஷ்டிர அரசியலில் வரலாறு காணாத திருப்பம்: ராஜ் - உத்தவ் தாக்கரே மீண்டும் கைகோர்க்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments