Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் பிரியாணி விருந்தில் அடிதடி: முதல் பந்தியில் அமர தள்ளுமுள்ளு

Webdunia
ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (18:04 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது தொண்டர்களுக்கு காங்கிரஸ் கட்சியினர் பிரியாணி விருந்து வைத்தபோது அதில் முதல் பந்தியில் அமர தொண்டர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பயங்கர அடிதடி ஏற்பட்டது. இதில் 7 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
 
உபி மாநிலம் பிஜ்னோர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நசிமுதீன் என்பவர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்ட தொண்டர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கூடிய நிலையில் இவர்களுக்காக ஒரு வீட்டில் பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் பிரியாணி விருந்தில் முதல் பந்தியில் இடம்பிடிக்க காங்கிரஸ் தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முந்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதில்  கொடிக்கம்புகளை மாற்றிப் பிடித்து ஒருவரை ஒருவர் தாக்கியதில் 7 பேர் மண்டை உடைந்தது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கலைத்தனர். கடைசியில் பிரியாணி விருந்து யாருக்கும் கிடைக்காமல் போனதுதான் சோகம்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments