Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காங்கிரஸை அழிக்க வேறு யாரும் தேவையில்லை, ராகுல், பிரியங்கா போதும்: யோகி ஆதித்யநாத்

காங்கிரஸை அழிக்க வேறு யாரும் தேவையில்லை, ராகுல், பிரியங்கா போதும்: யோகி ஆதித்யநாத்
, திங்கள், 14 பிப்ரவரி 2022 (13:34 IST)
காங்கிரஸ் கட்சியை அழிக்க வேறு யாரும் தேவையில்லை என்றும் அந்த கட்சியில் உள்ள ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய இருவரே போதும் என்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 உத்தரப்பிரதேச மாநிலத்தில் உச்ச கட்ட தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்று நம்பிக்கை தெரிவித்தார் 
 
மேலும் மேற்கு வங்கம் கேரளம் ஆகிய மாநிலங்களில் தேர்தலின்போது கொலைகள் வன்முறை வாக்குச்சாவடி கைப்பற்றுதல் ஆகியவை நடந்தது என சுட்டிக்காட்டிய யோகி, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதாக தெரிவித்தார் 
மேலும் காங்கிரஸ் கட்சியை அழிக்க ராகுல் காந்தி பிரியங்கா காந்தி ஆகிய இருவரே போதும் என்றும், வேறு வெளியிலிருந்து யாரும் வர தேவையில்லை என்றும் அவர் கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்!