Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முதியவர் அடித்து கொலை: 6 பேர் கைது

மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முதியவர் அடித்து கொலை:  6 பேர் கைது
, சனி, 3 அக்டோபர் 2015 (11:07 IST)
உத்திரப்பிரதேசத்தில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
 
உத்திரப்பிரதேச மாநிலம்  தாத்ரி மாவட்டத்தில் உள்ள  பிசடா கிராமத்தில் வசித்து வந்தவர் அக்லாப். கடந்த திங்கள் கிழமை அக்லாப்பின் வீட்டில் பசுமாட்டிறைச்சி சமைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் வெகுண்டெழுந்த பிசடா கிராம மக்கள் , அக்லாப்பின் வீட்டுக்குள் புகுந்து அவரை அடித்துக் கொலை செய்தனர்.
 
இந்த தாக்குதலில் அக்லாப்பின் மகன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு துணை ராணுவப்படையினர் முகாமிட்டுள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அக்லாப்பின் வீட்டில் மாட்டிறைச்சி சமைக்கப்பட்டதாக வெளியான தகவல் புரளி என்பது தெரியவந்தது.
 
பசுவின் இறைச்சி சாப்பிட்டதாக கூறி முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக அம்மாநில அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டிருந்தது.  
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 6 பேரை உத்திரப்பிரதே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil