Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் ஐ.நா. சபை கொடி தீவைத்து எரிப்பு

Webdunia
புதன், 7 அக்டோபர் 2015 (01:38 IST)
புதுச்சேரியில் ஐ.நா. சபை கொடி தீவைத்து எரித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
ஈழத்தமிழர் படுகொலை விவகாரத்தில், போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ள இலங்கை மீது பன்னாட்டு விசாரணையை ஐ.நா. சபையில் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக பெரியார் சிந்தனையாளர் இயக்கம் மற்றும் தமிழர் இயக்கம் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.
 
இதனையடுத்து, மேற்கண்ட காரணங்களுக்காக, இந்திய அரசை கண்டித்து புதுவை கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் அந்த அமைப்புகள் அறிவித்தனர். அது போல, சிங்காரவேலர் சிலை முன்பு திரண்டு, அங்கிருந்து புதுச்சேரி கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலம் அண்ணா சாலை, நேரு வீதி வழியாக கவர்னர் மாளிகை நோக்கி சென்றடைந்தது.
 
ஊர்வலம், ஆம்பூர் சாலை அருகே வந்த போது அவர்களை, போலீசார்  தடுத்து நிறுத்தினார்கள். இதனால், அவர்களுக்கும் போலீசாருக்கும்  இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் ஐ.நா. அமைப்பின் கொடியை சிலர் தீவைத்து எரித்தனர். இந்த செயலில் ஈடுபட்ட 84 பேரை போலீசார் கைது செய்தனர். 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments