மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி நெஞ்சுவலிக் காரணமாக, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 6 மணியளவில் உமா பாரதிக்கு ஒதுக்கப்பட்ட அரசு வீட்டில் இருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை மத்திய அமைச்சக செய்தித் தொடர்பாளர் சமிர் சிங்கா கூறினார். முதுகு பகுதியில் சுளுக்கு, மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த அவர், முதுகு சுளுக்கு காரணமாக நெஞ்சு வலியை உணர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.