Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய இணையமைச்சர் ஷோபாவின் காரில் மோதி ஒருவர் உயிரிழப்பு

Sinoj
திங்கள், 8 ஏப்ரல் 2024 (20:11 IST)
பெங்களூரில் மத்திய இணையமைச்சர் ஷோபாவின் காரில் மோதிய விபத்தில் பிரகாஷ் என்பவர் உயிரிழந்தார்.
 
வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் வரும் ஜூன் 1 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இத்தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, திரிணாமுல், சமாஜ்வாடி, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,  இன்று பெங்களூரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வதற்காக மத்திய இணையமைச்சர் ஷோபா காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது  காரில் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
 
பின்னால் இரு சக்கரம் வாகனம் வருவதைப் பார்க்காமல், கார் கதவறை திறந்ததாக கூறப்படுகிறது. இதில், பிரகாஷ்(62) கதவில் மோதி கீழே விழுந்துள்ளார்.
 
அப்போது பின்னால் வந்தால் வந்த பேருந்து அவர் மீது ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுபற்றி அறிந்த போலீஸார் ஷோபாவின் காரைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments