2014-15 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கிசான் தொலைகாட்சிக்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், வடகிழக்கு மாநிலங்களில் சாலைகளை சீரமைக்க ரூ. 3,000 கோடி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வரும் அவர், கிசான் (விவசாயி) தொலைகாட்சி அடுத்த ஆண்டு நிறுவப்படும் எனவும் அதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், வடகிழக்கு மாநிலங்களில் சாலைகளை சீரமைக்க ரூ. 3,000 கோடி ஒதுக்கப்படும், பரேலி, லக்னோ, ஹட்ச், சூரத், தமிழ்நாடு ஆகிய இடங்களில் ஜவுளி நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அல்ட்ரா மெகா சூரிய சக்தி உற்பத்தி திட்டங்களை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், நகரங்களை இணைக்கும் தொழிற்சாலை வளாக சாலைகளுக்காக ரூ.100 கோடி, துறைமுக திட்டங்களுக்காக ரூ.11,600 கோடி, தேசிய நெடுஞ்சாலைகளுக்காக ரூ. 37,800 கோடி ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!