Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுகாதாரமின்றி வாழும் மக்கள்: இந்தியா முதலிடம்

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2016 (16:59 IST)
பிரிட்டனை சேர்ந்த தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில், உலகிலேயே சுகாதாரமின்றி வாழும் நகர்ப்புற மக்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.


 

 
பிரிட்டனை சேர்ந்த வாட்டர் எய்ட் என்ற தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வில் சுகாதாரமின்றி வாழும் நகர்ப்புற மக்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
 
இந்திய நகர்புறங்களில் சுகாதாரமான கழிப்பிடங்கள் இல்லை. சுமார் 4 கோடி பேர் கழிவறையில் பயன்படுத்தாமல் இருக்கிறார்கள். சுகாதாரமின்றி வாழும் நகர்ப்புற மக்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
 
மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் சுகாதார குறைப்பாடு உள்ளது. இதனால் தொற்றுநோய் அபாயம் அதிகரிக்கும். மேலும் சர்வதேச கழிப்பிட தினம் நாளை கடைப்பிடிக்கப்படும் வகையில், இந்த ஆய்வறிக்கையை பிரிட்டன் தனியார் அமைப்பு வெளியிட்டுள்ளது. 
 
சுவச் பாரத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி முன்னெடுத்து செல்கிறது. இருந்தாலும் பொது சுகாதாரத்தில் இந்தியா பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் மருந்து வியாபாரம்.. மெடிக்கல் ஷாப் ஓனர்கள் யாரும் எதிர்க்கவில்லை.. ஏன் தெரியுமா?

விஜய்யின் கனவை கலைத்த அமித்ஷாவின் சென்னை விசிட். இனி யாருடன் கூட்டணி?

சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! பெரும் பரபரப்பு..!

நாம் தமிழர் கட்சிக்கும், துரைமுருகன் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை! – சீமான் பரபரப்பு அறிக்கை!

நாசாவில் பணிபுரிந்த இந்திய வம்சாவளி பெண் பணிநீக்கம்.. டிரம்ப் உத்தரவு ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments