Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மராட்டியத்திற்குள் சிபிஐ நுழைய தடை! – உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவு!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (13:51 IST)
மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் விசாரணை நடத்த அனுமதியின்றி சிபிஐ அதிகாரிகள் நுழைய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தடை விதித்துள்ளார்.

சிபிஐக்கு வழங்கப்படும் வழக்குகளை விசாரிக்க நாட்டில் உள்ள எந்த மாநிலங்களுக்கும் சென்று தேவையான விசாரணை மேற்கொள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு பொது இசைவு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனுமதி பெறாமலே விசாரணைக்காக மாநிலங்களுக்குள் செல்லலாம். ஆனால் சிபிஐக்கு வழங்கப்பட்டு வந்த இந்த பொது இசைவை கடந்த சில காலங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் திரும்ப பெற்றன.

இந்நிலையில் மும்பை தொலைக்காட்சி டிஆர்பி முறைகேடு, சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு என சிபிஐ மகராஷ்டிராவில் ஏகப்பட்ட வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் சிபிஐக்கு வழங்கி வந்த பொது அனுமதியை ரத்து செய்துள்ளார் முதல்வர் உத்தவ் தாக்கரே. இனி விசாரணைகளுக்கு மாநில அரசின் அனுமதி பெற்றே சிபிஐ நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு சவரன் ரூ.70,000 நெருங்கியது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சுமார் ரூ.1500 உயர்வு..!

டி.டி.வி. தினகரன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.. அமமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

சென்னை வந்த அமித்ஷா.. இரட்டை இலை வழக்கை தூசுத்தட்டிய தேர்தல் ஆணையம்! - என்ன நடக்குது அதிமுகவில்?

இப்படியா கொச்சையாக பேசுவது? அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்பி கண்டனம்..!

அதிமுகவில் இருந்து திடீரென விலகிய அம்மா நாளிதழ் வெளியீட்டாளர்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments