Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜதானி எக்ஸ்பிரஸில் மோதி இழுத்து செல்லப்பட்ட யானைகள்: அசாமில் சோகம்!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (10:42 IST)
ஜாகிரோடு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 காட்டு யானையின் மீது ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. 

 
கேரளாவில் இருந்து வந்துக்கொண்டிருந்த ரயில் வனப்பகுதிக்குள் இருந்து வெளியேறி ரயில் பாதையை கடக்க முயன்ற 3 யானைகள் மீது கடந்த வாரம் மோதியது. இதில் சுமார் 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதன் இரண்டு குட்டி யானைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 
 
இந்நிலையில் அசாமின் மோரிகான் மாவட்டம் ஜாகிரோடு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 காட்டு யானையின் மீது ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதியது. இதில் சில அடி தூரம் சென்று 2 யானைகளும் இழுத்துச் செல்லப்பட்டன. ஒரு யானை தண்டவாளத்திலேயே மரணம் அடைந்தது. மற்றொரு யானை பள்ளத்தில் விழுந்து மரணம் அடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
சமீபத்தில் ரயில்கள் மோதியதில் கடந்த 10 ஆண்டுகளில் 186 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என்று ஆர்.டி.ஐ தகவல் அளித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் 1,160 யானைகள் கொல்லப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமானம் விழுந்த இடத்திலும் உயரும் பலி எண்ணிக்கை.. இதுவரை மொத்த பலி 274..!

தவெகவின் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா.. நிறைவு விழா தேதி அறிவிப்பு..!

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments