Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் இரண்டு சகோதரிகள் கற்பழிப்பு

உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் இரண்டு சகோதரிகள் கற்பழிப்பு

Suresh

, சனி, 7 ஜூன் 2014 (12:02 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் இரண்டு சகோதரிகள் மூன்றுபேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 
 
உத்தரப் பிரதேசத்தில் இரண்டு தலித் சகோதரிகளை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை கொலை செய்து மரத்தில் தொங்க விட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் அங்கு மீண்டும் இரண்டு சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் இடாவா மாவட்டத்தில் உள்ள ஷியாபூர் கிராமத்தை சேர்ந்த 13 மற்றும் 15 வயதுடைய சகோதரிகள் 2 பேர் அருகே உள்ள கடைக்கு சைக்கிளில் சென்றிருக்கின்றனர்.
 
அப்போது அவர்களை வழிமறைத்த 3 பேர் கொண்ட கும்பல் இரு இளம் பெண்களையும் தூக்கி சென்று வயல்வெளியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 
 
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்ததையடுத்து, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ராஜ் பால், மகிபால், சஞ்சய் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil