Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை: உத்தர பிரதேச நீதிமன்றம் தீர்ப்பு

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2015 (15:45 IST)
இறைச்சிக்காக பசு மாட்டை வெட்டிக் கொன்ற இருவருக்கு உத்தரப் பிரதேசம் மாநில முசாபர் நகர் நீதிமன்றம் தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 
 
கடந்த 2004 ஆம் ஆண்டு ஒரு வீட்டை சோதனையிட்ட காவல்துறையினர், அங்கு 30 கிலோ மாட்டிறைச்சி மற்றும் பசு மாட்டின் தோல் ஆகியவற்றைக் கைப்பற்றினர். 
 
இது குறித்து, பசுவதை தடை சட்டத்தின் கீழ், முசாபர் நகர் மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரியாஸத், நஸிம் ஆகியோர் மீது வழக்கு நடைபெற்றது. 
 
இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட இருவருக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ 5,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

Show comments