Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை தடுக்க 2 மாதமாவது முழுமுடக்கம் அவசியம்! – ஐசிஎம்ஆர் கருத்து!

Webdunia
வியாழன், 13 மே 2021 (09:20 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் குறைந்தது 2 மாத பொது முடக்கமாவது அவசியம் என ஐசிஎம்ஆர் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள 700க்கும் அதிமான மாவட்டங்களில் 500க்கும் அதிகமான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10% க்கும் அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இதனால் குறைந்தது 6 முதல் 8 வார காலமாவது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மட்டுமே கொரோனா தாக்கத்தை குறைக்க முடியும் என கூறியுள்ள அவர், கொரோனா பாதிப்பு 10%க்கும் அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments