Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவை தடுக்க 2 மாதமாவது முழுமுடக்கம் அவசியம்! – ஐசிஎம்ஆர் கருத்து!

Webdunia
வியாழன், 13 மே 2021 (09:20 IST)
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் குறைந்தது 2 மாத பொது முடக்கமாவது அவசியம் என ஐசிஎம்ஆர் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரித்துள்ளனர். தினசரி பாதிப்புகள் 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள 700க்கும் அதிமான மாவட்டங்களில் 500க்கும் அதிகமான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10% க்கும் அதிகமாக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தலைவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார். இதனால் குறைந்தது 6 முதல் 8 வார காலமாவது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் மட்டுமே கொரோனா தாக்கத்தை குறைக்க முடியும் என கூறியுள்ள அவர், கொரோனா பாதிப்பு 10%க்கும் அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments